Wednesday, October 28, 2009

தலிபான்களுக்கு இந்தியா நிதியுதவி - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்  பாகிஸ்தானை சீர்குலைப்பதற்காக தலிபான் தீவிரவாதிகளுக்கு சிலர் நிதியுதவி அளித்து வருவதாகவும் அதில் இந்தியாவும் ஒன்று என்றும்  குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்க படைகளுடன் பாகிஸ்தான் படைகளும் இணைந்து தலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந் நிலையில் இந்தக் குற்றச்சாட்டை பாகி்ஸ்தான் முன் வைத்துள்ளது. ரஹ்மான் மேலும் கூறுகையில்,

தலிபான்களுக்கு இந்திய நிதியுதவி குறித்து முழு விவரங்கள் எனக்குக் கிடைத்துள்ளன. என்னுடைய குற்றச்சாட்டை இந்தியாவின் உள்துறை அமைச்சர் மறுத்தால், அவருடைய கருத்தை நிராகரிப்பதில் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

Saturday, September 26, 2009

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள சூழ்நிலை திருப்திகரமாக உள்ளது - ஐ.நா துணைச் செயலாளர்

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள சூழ்நிலை திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளார் முகாம்களைப் பார்வையிட வந்த ஐ.நா. மனித உரிமைப் பிரிவு துணைச் செயலாளரும், சிறப்புத் தூதருமான வால்டர் காலின். 

இவ்வாறு இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசு இடம் பெயர்ந்தோர் முகாம்களில் சிறப்பான வசதிகளைச் செய்துள்ளதாகவும், நல்ல வசதிகளுடன் தமிழர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணிக் பார்ம் முகாம், கதிர்காரமல் நலன்புரி கிராமங்கள் ஆகியவற்றுக்குச் சென்று பார்த்தார் காலின்.

அவருடன் வவுனியா அரசுப் பிரதிதிநிதி சார்லஸ், வன்னி பாதுகாப்புப் படை கமாண்டர் கமல் குணரத்னே ஆகியோரும் உடன் சென்றனர்.

இடம் பெயர்ந்த மக்களின் திறமைகளை வளர்ப்பதற்காக அவர்களுக்காக செய்யப்பட்டுள்ள பயிற்சி முகாமையும் காலின் பாராட்டினார்.

எந்தவித அடிப்படை வசதியும் இன்றி, ஆடு மாடுகளைப் போல தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு அமைப்புகளும் குற்றம் சாட்டி வரும் நிலையி், முகாம் நிலை குறித்து காலின் திருப்தி அடைந்துள்ளதாக இலங்கை ராணுவ இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, September 24, 2009

காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் - கடாபி


காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி.


ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, காஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது.

பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக் கடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.

பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது.

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

மேலும்

காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேலும் எந்த நாட்டையும் சேர்க்கக் கூடாது என்றார் கடாபி.

இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை




இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சென்னையில் நடந்துள்ளது. ஒருவரின் கல்லீரலைப் பெற்று அதை இரண்டாகப் பிரித்து இருவருக்குப் பொருத்தி டாக்டர் முகம்மது ரெலா என்ற டாக்டர் பெரும் சாதனை செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருப்பவர் டாக்டர் ரெலா. இந்த மருத்துவமனை சென்னை மற்றும் பெங்களூரிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.

சாதனை அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் ரெலா கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு கல்லீரலை இரண்டாகப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். உறுப்பு தானம் செய்தவரின் உடலிலிருந்து இந்த கல்லீரல் பெறப்பட்டது.

உலகம் முழுவதும் கல்லீரல் தானமாக கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது. எனவே கிடைத்த கல்லீரலை அதிகபட்சம் பேருக்குப் பயன்படுத்தும் முறை உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. அதேசமயம், இந்தியாவில் இவ்வாறு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒரு கல்லீரலைப் பிரித்து இருவருக்குப் பொருத்துவது நோயாளிகளுக்கு பெரும் வரப் பிரசாதமாக அமையும் என்றார் டாக்டர் ரெலா.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை யில் டாக்டர் ரெலா இதுபோன்ற அறுவைச் சிகிச்சையை செய்துள்ளாராம். இந்த தொழில்நுட்பம் ஐரோப்பாவில் உருவானது. கிங்ஸ் மருத்துவமனையில் டாக்டர் ரெலாதான் முதல் முறையாக இதை செய்து அறிமுகப்படுத்தினாராம்.

சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் கல்லீரலைத் தானமாக பெற்று அதைப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பொருத்தியுள்ளார் டாக்டர் ரெலா.

தானமாக பெறப்பட்ட கல்லீரலை இரு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதில் சிறிய இடதுபுறப் பகுதியை இளம் பெண் ஒருவருக்கும், பொரிய பகுதியை வயதான பெண்மணிக்கும் பொருத்தியுள்ளனர்.

கல்லீரல் பொருத்தப்பட்ட இளம் பெண் , கிரிக்லர் நஜர் சின்ட்ரோம் என்ற அரிய பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இதுபோன்ற பிரச்சினை இருந்தால் பிறக்கும்போதே, மஞ்சள் காமாலை நோய் வரும். இந்தப் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவ நேரிடும் என்றார் டாக்டர் ரெலா.

Tuesday, September 22, 2009

சீமானின் நம் தமிழர் இயக்கத்தில் உறுப்பினராக



நாம் தமிழர் பேரியக்கத்தில் இணைவதற்கான விருப்ப விண்ணப்பம்


பதிவு செய்ய...